ஒரு மனிதனின் எல்லாவகையான செயல்பாடுகளையும் முடிவு செய்வது அவனது இலக்குதான்! எந்த குறிக்கோளும் இல்லாமல் சுற்றி திரிபவனை இலக்கில்லாமல் உள்ளான் என்கிறோம்.
இலக்குதான் ஒருவனை சதனையாளனாக்குகிறது!
இலக்குதான் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்துகிறது!
இலக்குதான் வாழ்வை சுவையுள்ளதாக்குகிறது!
இலக்குதான் ஒருவனை செயல்பட வைக்கிறது!
இலக்குதான் ஒருவனுக்கு அனுபவம் தருகிறது!
இலக்குதான் வாழ்வை உன்னதமாக்குகிறது!
வெள்ளையனுக்கு எதிராக கப்பல் விட வேண்டும் என்ற வ.உ.சிதம்பரனாரின் இலக்கு........
அடிமை வாழ்வில் அமிழ்ந்து கிடந்த இளைஞர்களை தாயக விடுதலைக்காக தட்டி எழுப்ப வேண்டும் என்ற மாவீரன் பகத்சிங்கின் இலக்கு.....
அம்மை நோயை உலகை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்ற மருத்துவ மாமேதை ஜென்னரின் இலக்கு...
அவர்களை மாமனிதர்களாக்கியது!
மனிதனை தொடர்ந்து இயக்கும் விசை இலக்குதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக