வியாழன், 28 ஏப்ரல், 2011

2. இலக்கை வரையறுப்போம்

வாழ்வின் இலக்கை சரியான முறையில் வரையறை செய்து விட்டால் செயல்பாட்டில் சோர்வு இருக்காது. வெறுப்பு இருக்காது மற்றும் எரிச்சல் இருக்காது. இலக்கை வரையறை செய்யும்பொழுது அது அடையக்கூடிய, சாதிக்க கூடிய இலக்காய் இருப்பது அவசியம்.

நமக்கு நாமே வரையறுத்து கொண்டால் தான் அது இலக்கு! மற்றவர் நம் மீது திணித்தால் அதன் பெயர் தண்டனை!

இலக்கை வரையறை செய்வது எப்படி?

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பொதுத் தேர்வில் ஆயிரத்து இருநூறுக்கு எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.

மதிப்பெண்ணை முடிவு செய்துவிட்டலே இலக்கை வரையறுத்துவிட்டதாக பொருளாகாது!

அந்த மதிப்பெண்ணை பயன்படுத்தி எந்த உயர் படிப்புக்கு செல்ல வேண்டும்?

அந்த படிப்பை முடித்துவிட்டு, எந்த பதவிக்கு செல்ல வேண்டும்?

அந்த பதவியை பயன்படுத்தி சமுதாயத்தில் எப்படி சிறப்பாக செயலாற்றவேண்டும்?

சிறப்பாக செயலாற்றுவதன் மூலம் மற்றவர்களுக்கு எப்படி முன்மாதிரியாய் விளங்க வேண்டும்?

இவையனைத்தையும் வரையறுப்பதுதான் இலக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக