வெள்ளி, 6 மே, 2011

3. இலக்கை வரையறுத்தலின் இரண்டு குணங்கள்

தன்னல அடிப்படையில் இலக்கை வரையறுக்கலாம்
பொதுநல அடிப்படையில் இலக்கை வரையறுக்கலாம்


ஒரு தொழிற்சாலையை நிறுவி எனது நாட்டு மக்கள் ஆயிரம் பெருக்கு வேலை வாய்ப்பை வுருவக்க வேண்டும் என வரையறுப்பது மறுகோணம். ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் போது கட்டாயம் நமக்கு வருவாய் கோடிகளில் வரும்.


முன்னது சுயநல இலக்கு!
பின்னது பொதுநல இலக்கு!


"அரசு பள்ளியில் ஆசிரியராகி கிடைக்கும் சம்பளத்தில் அழகிய வீடு கட்டி மகிழ்வுடன் வாழ்வேன்" என முடிவு செய்யலாம். "அரசு பள்ளியில் ஆசிரியராகி மாணவ மாணவியர்க்கு சிறப்பான கல்வி தருவேன். அரசு பள்ளியிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்ற நல்லெண்ணத்தை சமுதாயத்தில் உருவாக்குவேன்! ஆசிரியர் பணி மூலம் சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும் அறியாமையை ஓட்டுவேன்" என முடிவு செய்யலாம்.

பொதுநல நோக்கில் இலக்கை வரையறுக்கும் போது நமது வருவாய் குறையாது. அதே சமயம் மனதில் இறுக்கம் குறையும். பெருமித எண்ணம் வளரும்!

"ஓர் உயர்ந்த உன்னத இலக்குக்காக செயலாற்றிக்கொண்டு உள்ளோம்" என்ற எண்ணம் நம் மனதில் உறுதியை உண்டாக்கும்! தடைகள், சிறு தோல்விகள் வந்தாலும் மனம் தளராது!

இன்றைய சமூக கருத்தியல் நமது உன்னத மனித வாழ்வை வெறும் சொத்து குவிக்கும் சுயநல வாழ்வாக சுருக்க முயல்கிறது. நமது மனிதத் தன்மையை சிறிது சிறிதாய் பூக்கி சுயநல பிண்டமாய் நம்மை மாற்ற எத்தனிக்கிறது.

பொதுநலன் - சமூக முனேற்றம் என்ற அடிப்படையில் இலக்கை வரையறுத்தல் மட்டுமே நாம் சுய நல கருத்தியலிலிருந்து தப்ப முடியும்.

இலக்கை சிறப்பாய் வரையறுத்தால் மட்டுமே திட்டமிடல் நுட்பமாய் அமையும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக