திட்டமிடல் முடிந்தவுடன் செயல்படத் துவங்க வேண்டும்.
வரும்முன் காப்பவன் அறிவாளி! வந்த பின்பும் காப்பவன் புத்திசாலி!
செயல்படும் பூத்து அறிவாளியாகவும் இருக்க வேண்டும், புத்திசாலியாகவும் இருக்கவேண்டும்.
வாழ்வே செயல்தான்! தொழில், குடும்பப்பணி, சமூகப்பணி, ஓய்வு, உறக்கம், பொழுதுபோக்கு என அனைத்தும் செயல்களே!
ஒரு குறிப்பிட்ட வேலையில் அல்லது பதவியில் இருக்கும்போது நமக்கு ஒதுக்கப்பட்ட கடமையை சிறப்புடன் செய்ய வேண்டும்!
நமது வேலையை ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!
"செய்யும் தொழில் மென்மையானது, தொழில் செய்யும் இடம் உன்னதமானது" என்ற உணர்வு நமக்கு வரவேண்டும்.
தனியார் துறையில் கண்காணிப்பு கடுமையாய் இருக்கும். அதற்காக வெறுப்படையாமல் நமது கடமையை சிறப்புடன் செய்ய வேண்டும்.
அரசுத்துறையில் கண்காணிப்பே இருக்காது. அதற்காக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோம்பல் அடையாமல் நமது கடமையை பொறுப்புடன் செய்ய வேண்டும்.
சுய தொழிலில் ஏற்றம் இருக்கும், இறக்கம் இருக்கும், தடைகள் இருக்கும். எதிர் பாராத இழப்பு இருக்கும். சுயதொழில் செய்வோர் தங்கள் வேலையை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு செயலாற்ற வேண்டும்.
தனியார் துறையில் பணி நிறைவு உண்டு. பணிப்பாதுகப்பு குறைவு. சுய தொழிலில் வேலை செய்து கொண்டே இருப்பது போல் இருக்கும். ஆனால் உழைக்க உழைக்க நமக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
அரசுத்துறையில் விடுமுறை, பணிப்பாதுகாப்பு உண்டு. ஒரு சோஷலிச சமுதாயத்தில் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கக் கூடிய அணைத்து உரிமைகளும் அரசு ஊழியர், அரசுப்பள்ளி ஆசிரியர், அரசு கல்லூரி பேராசிரியருக்கு உண்டு. அனால் பணிநிறைவு கிடைப்பது இல்லை. குறைந்தபட்சம் வேலைகூட செய்யாத சிலபேர் மனநோயாளி ஆகின்றனர்.
அரசுப்பணியில் கடமையை சிறப்புடன் செய்யாதவர்கள் தங்கள் வருவாயின் பெரும்பகுதியை மருத்துவமனைக்கும் கோயில் பயணங்களுக்கும் செலவிடுவதை ஒரு ஆய்வு சொல்கிறது.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் வாடும் பெற்றோர்களில் பெரும் பகுதியினர் அரசு ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரிய பெருமக்கள் என்பது அதிர்ச்சி தகவல்.
சமூகத்தைப்பற்றி - கடமையைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் எந்த பிள்ளைகளுக்காக சொத்து சேர்த்து தங்கள் வாழ்வையே வீனாக்கினார்களோ அந்த பிள்ளைகளால் மிக மோசமாய் வஞ்சிக்கபடுபவர்களும் இவர்களே!
ஒரு மனிதன் மனித நியாயங்களுடன் மனிதப் பண்போடு தொடர்ந்து வாழ வேண்டும் எனில் எட்டுமணி நேரம் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.
செயல்தான் வாழ்கை! ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீர் தெளிவாய் இருக்கும்.
செயல்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதன்தான் தக்க சமயத்தில் சரியான முடிவு எடுக்கும் ஆற்றல் உள்ளவனாய் திகழ்கிறான்.
ஆசிரியர்கள் யாவரும் பள்ளியில் உள்ள பெற்றோர்களே!!
புதன், 25 மே, 2011
5. செயல் செயல் செயல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக