ஆளுமை திறன் சிறப்பாய் உள்ளவர்களால் மட்டுமே நெருக்கடியான சூழலிலும் சரியான முடிவை எடுக்க இயலும்.
ஆளுமை என்பது இரண்டு கூறுகளை உடையது.
1. உருவ ஆளுமை 2. உள்ள ஆளுமை
உருவ ஆளுமை மூன்று முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. 1.உடை 2.உடல்நலன் 3. தோற்றப்பொலிவு
உள்ள ஆளுமை என்பது மனப்பான்மை (Attitude) மற்றும் தலைமைப் பண்புகளால் (Leadership Characters) தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட வேலையை செய்பவர், ஒரு சிறு குழுவை வழி நடத்துபவர், மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர், ஆசிரியர்களை வழிநடத்தும் தலைமை ஆசிரியர், ஊழியர்களை வழி நடத்தும் வங்கி மேலாளர், மாவட்ட நிர்வாகத்தை வழி நடத்தும் முதலமைச்சர், நாட்டை வழி நடத்தும் தலைமை அமைச்சர்.... என அனைவருக்கும் ஆளுமை திறன் இன்றியமையாதது ஆகும்.
ஆளுமை திறன் இல்லாதவர்கள் தலைமை இடத்தில இருந்தால் அவர்கள் மற்றவர்களை கண்டு அஞ்சுவர். அச்சத்தின் வெளிப்படை மற்றவர்கள் மீது கோபப்படுவர். எரிந்து விழுவர். சிறு தவறுகளையும் பெரிதாக்கி தங்களையும் மற்றவர்களையும் குழப்பிக் கொள்வர்.
ஆளுமைத் திறன் உடையவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது அதிகம் கோபப்பட மாட்டார்கள். தங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளைக் கண்டு தேவையின்றி பயப்படவும் மாட்டார்கள்.
ஆளுமைத் திறன் உடையவர்கள் எப்போதும் நிகழ்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவர். இறந்த கால நிகழ்வின் மூலம் சில படிப்பினைகளை பெறுவர். மற்றபடி இறந்தகால ஆராய்சிக்காக தங்களின் ஆற்றலை வீணாக்கமாட்டார்கள். எதிர்கால திட்டமிடல் அவர்களிடம் இருக்கும். எதிர்கால கற்பனை அவர்களிடம் இருக்காது.
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்களின் ஆளுமை திறனை பொறுத்தது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழக்கமான பாடங்களுடன் ஆளுமை திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்"
என்ற திருக்குறளில் உள்ள திண்ணியர் என்ற சொல் ஆளுமை திறனை குறிக்கிறது.
ஆளுமைத் திறனை முறையான பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். நான் என்று முதல் எனது ஆளுமை திறனை வளர்த்துக் கொள்வேன் என்ற ஆழமான உறுதியான விருப்பம் (Deep Strong Desire) இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் யாவரும் பள்ளியில் உள்ள பெற்றோர்களே!!
திங்கள், 16 மே, 2011
7. ஆளுமை (PERSONALITY)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை
பதிலளிநீக்குஉங்கள் முயற்சிக்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்